சொந்த ஊரில் பொன்னியை அவமானப்படுத்த நினைக்கும் மாயா..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் மாயாவும், பூஜாவும் கைகோர்த்து பொன்னியை பழிவாங்க பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

பொன்னி மில்ஸ் பெண் தொழிலாளர்களை வைத்து பொன்னியை அசைக்க நினைத்த மாயாவின் திட்டத்தை பொன்னி தூள்தூளாக்க, அடுத்ததாக பொன்னியின் பெயரை கெடுக்க நினைக்கு புதிய சூழ்ச்சியை மாயா அரங்கேற்றுகிறார். இதற்கிடையே பொன்னி தனது குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு செல்ல தயாராகிறார். இதை தெரிந்து கொள்ளும் மாயா, பொன்னியை சொந்த ஊரில் வைத்து அவமானப்படுத்த திட்டமிடுகிறார்.

கோயில் நிர்வாகிகளை அழைத்து அம்மனுக்கு வைர கிரீடம் சாத்துவதாக கூறி தனக்கு கோயிலில் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று கேட்கும் மாயாவின் திட்டம் நிறைவேறுமா? மாயாவின் திட்டங்களை பொன்னி முறியடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *