மெட்ராஸ், கொம்பன் என இரண்டு வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்த நடிகர் கார்த்தி, தற்போது காஷ்மோரா மற்றும் நாகார்ஜுனனுடன் இன்னும் பெயர் வைக்கப்படாத திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையம்சம் உள்ள தனது அடுத்த படத்தில் நடிக்க மணிரத்னம், கார்த்தியை நேரில் சந்தித்து பேசியதாகவும், அதற்கு கார்த்தி ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி, அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘பருத்திவீரன்’ படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை மணிரத்னம் ஹீரோவாக வைத்து படமெடுப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Karthi now accepted act in Maniratnam’s film after finishing Kashmora and nameless film with Naagarjun.