வெயிலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. மக்கள் நடமாட்டம் பகல் நேரங்களில் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பது சற்று தள்ளிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இல்லை என்ற செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

English Summary: Schools reopening dates won’t be postponed, Education Secretary Tmt.Sabitha.