இன்று ரயில்வே துறையினர்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அரக்கோணம் – திருத்தணி இடையேயான புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

  • ரயில் எண் 43515: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 7 மணிக்கு திருத்தணி வரை செல்லும் மின்சார ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 43517: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 8.16 மணிக்கு திருத்தணி வரை செல்லும் மின்சார ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 43520: திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 9.40 மணிக்குப் புறப்படும் ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 43556: திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 11 மணிக்குப் புறப்படும் ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

English Summary : Train number 43515, 43517, 43520, 43556 has been rescheduled due to maintenance work.