vjandatleeஇளையதளபதி விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வரும் செப்.17ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒன்பது நாடுகளில் நடந்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற விஜய் சென்னை திரும்பியதை அடுத்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படத்தொடக்க விழா இன்று சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸ் என்ற படப்பிடிப்பு தளத்தில் இந்த படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அட்லியின் முந்தைய படமான ‘ராஜா ராணி’ படத்தின் தொடக்கவிழாவும் இதே இடத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அட்லி இணையவிருக்கும் ‘விஜய் 59’ படத்தொடக்க விழாவில் விஜய், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் பிரபு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் வரவில்லை. சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary : Vijay – Adly joins Vijay 59 ‘ patattotakka Festival