சென்னை மாநகர் தனது 376வது பிறந்த நாளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாட உள்ளது. இந்த பிறந்த நாளை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு அமர்க்களமான கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர் கடந்த 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி உருவானது. இந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மெட்ராஸ் வீக்’ என்ற நாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என்று சென்னையின் வரலாறு குறித்து ஆர்வம் கொண்ட அனைவரும், இந்த மெட்ராஸ் வீக் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்கு வகித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

குறிப்பிட்ட வாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளை இதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஊக்குவிப்பதுடன், அவை பற்றிய விளம்பரப்படுத்துதல், அரங்கங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றிற்கும் உதவுவார்கள். முந்தைய ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது பேச்சுப்போட்டி, வினாடி-வினா, கண்காட்சிகள், தனித்திறமைகளை வெளிப்படுத்துதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில். இந்த ஆண்டு புகைப்படம், உணவு திருவிழாக்கள் என்று அதிக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Chennai to celebrate its 376th birthday. This celebration will be celebrated for 8 days form August 16th to August 23rd.